திருவாடானை ஏழூரில் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை, ஏப். 22:  திருவாடானை அருகே ஏழூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ  கருப்பர் காளியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.  முன்னதாக கோயிலுக்கு முன்பு யாக சாலை வளர்த்து, நான்கு கால பூஜைகள்  நடத்தினர். தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் புனிதநீர் கோயிலின்  கலசத்திற்கு எடுத்து சென்று ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர்  கருப்பர், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனைகள்  நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: