சிவகாசி அருகே வீடு இடிந்து வாலிபர் பலி

சிவகாசி, ஏப். 20: சிவகாசி அருகே கொத்தனேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா (65). இவர் தனது தொகுப்பு வீட்டை மராமத்து செய்து வருகின்றார். நேற்று இவரது வீட்டில் மராமத்து செய்யும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் எரிச்சநத்தம் அருகே தாளிகுளத்துப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பூபதிராஜன் மகன் அஜித்குமார் (23) படுகாயமடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: