போடி, ஏப். 20:தேனி மாவட்டம், போடியில் பங்குனி, சித்திரை மாதங்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்டும். குறிப்பாக சித்திரை மாதத்தில் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடக்கும். இந்நிலையில், போடி ஜீவா நகரில் காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில் கோயிலிலிருந்து பொதுமக்கள் கொட்டகுடி ஆற்றுக்கு சென்று, பூஜைகள் செய்து கரகம் எடுத்தனர்.