திருப்புத்தூர், ஏப்.20: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காப்பு கட்டப்பட்டு துவங்கியது. திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று காலை 8 மணியளவில் கொடிமரத்திற்கும், குருக்களுக்கும் காப்பு கட்டி தொடங்கப்பட்டது. தொடர்ந்து மாணிக்க நாச்சி அம்மனுக்கும், கொடிமரத்திற்கும் பால், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க நாச்சி அம்மன் மற்றும் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.