கரூர், ஏப். 19: கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் உள்ளே வந்த அனைவரையும் போலீசார் திருப்பி அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை விபத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த, அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களும் ஏப்ரல் 18ம்தேதி முதல் தலைக்கவசம் அணிந்துதான் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும். மேலும், தலைக்கவசம் அணியாமல் பெட்ரோல் பங்க், டாஸ்மாக் போன்ற பகுதிகளுக்கு சென்றாலும் ஒத்துழைப்பு வழங்க கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்தது.