ஊட்டி, ஏப்.13: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பீட்ரூட் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, வெள்ளை பூண்டு, முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு குறித்த சமயத்தில் பருவமழை ெபய்த நிலையில், அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பல்வேறு காய்கறிகளை பயிரிட்டனர். ஆனால், யாரும் எதிர் பாராத நிலையில், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.