நாங்குநேரி, ஏப்.2: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து முனைஞ்சிபட்டி, காடன்குளம், விஜயநாராயணம் வழியாக திசையன்விளைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள், கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் பஸ் இயக்க ேகாரி விஜயநாராயணம் பகுதி மக்கள் போராட்டம் அறிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தற்போது பள்ளிகள் திறந்து செயல்படுவதால் கிராமப்புற மாணவர்கள் பள்ளி செல்வதற்கு ஏதுவாக காலை நேரத்திற்கு பஸ் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நாங்குநேரி யூனியன் சேர்மன் சௌமியா ஆரோக்கிய எட்வின் தொடர் முயற்சியால் நேற்று முதல் புதிய பஸ் ேசவை தொடங்கப்பட்டுள்ளது.