ஆத்தூர், மார்ச் 30: தலைவாசல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் காருக்கு கட்டணம் கேட்ட பெண் ஊழியரை தாக்கிய, திமுக இளைஞர் அணி நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரையில் தேசிய நெடுஞ்சாலையில் டோல்ககேட் உள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று டோல்கேட்டுக்கு வந்தது. அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் காருக்கு கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளாளர். ஆனால் காரில் இருந்தவர்கள், தாங்கள் கட்டணம் செலுத்த மாட்டோம் எனக்கூறி பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.