எஸ்பி அதிரடி நடவடிக்கை விக்கிரமங்கலம் அருகே கள்ளத்தனமாக விற்ற 50 மது பாட்டில்கள் பறிமுதல்

தா.பழூர், மார்ச்23: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் எஸ்ஐ ராஜா தலைமையிலான காவல்துறையினர் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது கிடைத்த ரகசிய தகவலின் படி பெருமாள் குளத்தின் கரையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து ஒருவர் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் மது விற்பனை செய்து கொண்டிருந்த நபர் காவல்துறையினரை கண்டவுடன் மது பாட்டில்களை அந்த இடத்திலேயே விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் காவல்துறையினர் அவர்விட்டுச் சென்ற பையை சோதனை செய்து போது அதில் 50 மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து 50 மது பாட்டில்களை கைப்பற்றி தப்பி ஓடிய மர்ம நபர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: