மன்னார்குடி, மார்ச் 23: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முல்லை நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (57). இவருக்கு வானமாதேவி என்ற மனைவியும், அசோக் குமார் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர். இவர் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக வேலை பார்த்து வந்தார்.எஸ்எஸ்ஐ ஜீவானந்தம் பணியில் இருந்த போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 6ம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.