2வது நாளாக பெய்த மழைவேப்பனஹள்ளி, மார்ச் 22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டிவந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வானில் கருமேகங்கள் திரண்டு வந்து திடீர் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பகல் மற்றும் இரவு நேரத்தில் வீசிய அனல் காற்று தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையும் திடீரென மழை பெய்தது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.