மேலூர், மார்ச் 19: கீழவளவில் உள்ள வீரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். மேலூர் அருகே கீழவளவில் உள்ள வீரகாளியம்மன் மற்றும் பரிவார தேவதைகள், பெரியமந்தை ஆலயத்தில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற யாகசாலையை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவிற்காக கீழவளவு, வாச்சாம்பட்டி, வடக்கு வலையபட்டி, சருகுவலையபட்டி, தனியாமங்கலம், இ.மலம்பட்டி, கீழையூர், செம்மினிப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் 30 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.