சின்னாளபட்டி பள்ளியில் தமிழக ஹேண்ட் பால் அணிக்கு இன்று தேர்வு

சின்னாளபட்டி, மார்ச் 19: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியில் தமிழக பெண்கள் ஹேண்ட் பால் அணிக்கான தேர்வு நாளை  (மார்ச் 20, ஞாயிறு) காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு ஹேண்ட்பால்  கழகத்தின் தலைவர் சுப்பரமணியன், மாநில செயலாளர் சிவக்குமார் தலைமையில்  நடைபெறும் இந்த தேர்வில் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்து  ஹேண்ட்பால் விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இங்கு தேர்வு  செய்யப்படும் மாநில அளவிலான அணி தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் மார்ச்  29ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான ஹேண்ட்பால்  போட்டியில் பங்கேற்க உள்ளது. தமிழக பெண்கள் அணிக்கான வீராங்கனைகள்  தேர்விற்காக தமிழ்நாடு ஹேண்ட்பால் கழகமும், சேரன் பள்ளி நிர்வாகமும்  ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Related Stories: