திருப்பூர், மார்ச் 17: திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீர்த் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2-வது குடிநீர்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் 17, 18 ஆகிய 2 நாட்கள் மின்சார வாரியத்தின் மூலம் மின் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.