அந்தியூர், மார்ச் 17: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது அத்தாணி. இங்குள்ள காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (34). இவர் பைக்கில் பாத்திரம் விற்பனை செய்து வந்தார். இவரது தந்தை கணேசன், தாயார் மற்றும் உடன் பிறந்த தம்பி ஆகியோர் இறந்த நிலையில், நாகராஜ் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு ஆப்பக்கூடல் நோக்கி பைக்கில் சென்றார்.கீழ்வாணி-நஞ்சுண்டாபுரத்திற்கு இடையே வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.