காரியாபட்டி, மார்ச் 5: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இதுவரை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வந்தனர். அதிமுகவின் கோட்டையாக இருந்த காரியாபட்டி பேரூராட்சியை திமுக முதல் முறையாக கைப்பற்றி பேரூராட்சி சேர்மனாக 10வது வார்டில் வெற்றி பெற்ற திமுக நகர செயலாளர் செந்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவராக உருவி சந்தோஷம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.