சிங்கம்புணரி, மார்ச் 5: சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி சேர்மன் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் தலைவர் பதவிக்கு அம்பலமுத்து மனு செய்தார். இவர் கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டில் சேர்மனாக பதவி வகித்தார். தற்போது இரண்டாவது முறையாக சேர்மன் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். அவருக்கு அனைத்து வார்டு கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அம்பலமுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஜான் முகமது அறிவித்தார். இதைத்தொடர்ந்து துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பாக இந்தியன் செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.