செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய தொழில் சான்றிதழில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த 2014 முதல் 2020ம் ஆண்டு வரை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழில்பிரிவின் சான்றிதழ்களில் உள்ள பயிற்சியாளார் பெயர், தந்தையின் பெயர், தாயார் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் தொழில்பிரிவின் பெயரில் உள்ள திருத்தம் ஆகியவற்றை சரி செய்து கொள்ளலாம்.