வருசநாடு, பிப். 25: வருசநாடு அருகே விருதுநகர் மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் அமைந்துள்ள பஞ்சம்தாங்கி மலைத்தொடரில் நேற்று இரவு காட்டுத் தீ பரவியது. இந்த மலைத்தொடரின் மற்றொரு பகுதி கண்டமனூர் வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த நிலையில் நேற்று மாலை சாப்டூர் மலைப்பகுதியில் திடீரென காட்டு தீ பரவியது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென கண்டமனூர் வனப்பகுதியில் பரவ தொடங்கியது. இதனையடுத்து ஏற்கனவே தயார் நிலையில் இருந்த 25க்கும் மேற்பட்ட கண்டமனூர் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு கண்டமனூர் மலைப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.