திருப்பூர்,பிப்.18:திருப்பூர் மாநகராட்சி 35வது வார்டில் திமுக சார்பில் செந்தூர் முத்து போட்டியிடுகிறார்.அவர் 35வது வார்டுக்கு உட்பட்ட வாலிபாளையம், கே.பி.என்.காலனி, அணைக்காடு, முள்ளுக்காடு, பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது தன்னை வாக்களித்து வெற்றி பெற செய்தால், 5 ஆண்டு காலமும் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக பாடுபடுவேன் என பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்தார். செந்தூர் முத்து பிரசாரத்தின் போது கூறியதாவது:- அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் பொது இ-சேவை மையம் அமைக்கப்படும்.மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான இலவச சேவை மையம் இன்டர்நெட் வசதியுடன் செய்து கொடுக்கப்படும். பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் நடத்தப்படும். வாரம் இரு முறை தடையற்ற குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த தார்சாலை வசதி, தெரு விளக்கு வசதி, ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து தரப்படும்.35வது வார்டில் உள்ள பெண்கள் அவரவர் திறமைக்கேற்ப தயாரிக்கும் பொருட்களுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வாரம் ஒரு முறை இலவச ஆங்கில பயிற்சி முகாம் மற்றும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.