திருமயம். பிப்.17: அரிமளம் அருகே நடைபெற்ற இல்லம் தேடி கல்வி துவக்க விழாவில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.தமிழகம் முழுவதும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கல்வியில் இடைநிற்றல் குழந்தைகள், கல்வி கிடைக்காத குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. ஓணாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.