எஸ்எஸ்ஐ தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது

பழநி, பிப். 15: பழநி அடிவாரம் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ சந்தானகிருஷ்ணன் (50), பிப்.6ம் தேதி புதுநகர் செல்லும் சாலையில் தனது நண்பர் ஆனந்தனுடன் (48)  பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டதில் சந்தானகிருஷ்ணன், ஆனந்தனுக்கு அரிவாள், பாட்டில் வெட்டு விழுந்தது. இதுகுறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த பழநி டவுன் போலீசார் தகராறில் ஈடுபட்ட பாண்டியன் நகரை சேர்ந்த யுவராஜ் (24)ஐ கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மற்றொரு முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த பொன்குமார் (22)ஐ நேற்று கைது செய்தனர்.

Related Stories: