திருப்பரங்குன்றம், பிப்.11: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கடந்த பிப்.1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலை மாலை நேரங்களில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.