திருப்பூர், பிப்.12: திருப்பூர் மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள தேர்தல் பணிமனைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் 58-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக காந்திமதி போட்டியிடுகிறார். தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 58-வது வார்டுக்கு உட்பட்ட செட்டிபாளையத்தில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டது.