துறையூரில் பறக்கும் படை வாகன சோதனை டூவீலரில் புகையிலை பொருட்கள் கொண்டு வந்த பாஜ நிர்வாகி கைது

துறையூர், பிப். 11: துறையூர் அருகே ஒ.கிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் செந்தில்குமார்(38). திருச்சி புறநகர் மாவட்ட பாஜக பொதுச்செயலராக உள்ளார். இவரது ஊரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று துறையூர் பாலக்கரையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் சென்ற செந்தில்குமாரை மறித்து சோதனையிட்ட போது அவர் அரசு தடைசெய்துள்ள 3 கிலோ எடையளவில் ஹான்ஸ் பாக்கெட்டுகளையும், 860 கிராமில் பான் மசாலாவையும், 450 கிராமில் புகையிலை பாக்கெட்டுகளையும் சட்ட விரோதமாக எடுத்துச் செல்வது தெரிந்தது. உடனே அவைகளை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் செந்தில்குமாரையும் பிடித்து துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

Related Stories: