குத்தாலம் அரசு பள்ளிக்கு நூலகம் அமைக்க புத்தகம் வழங்கல்

குத்தாலம், பிப்.10: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூலகம் அமைப்பதற்கு காவல்துறை சார்பில் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட துணை சூப்பிரண்டு வசந்தராஜ் கலந்துகொண்டு பள்ளியில் நூலகம் அமைப்பதற்கு புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். மேலும் புத்தகங்கள் படிப்பதன் அவசியம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவது, கல்வியைக் எவ்வாறு கற்பது உள்ளிட்டவைகள் குறித்தும் பேசினார். அப்போது குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: