திருமயம். பிப்.9: திருமயம் அருகே அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 30 யூனிட் மணலை போலீசார் உதவியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வடக்கு நல்லிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மணல் சாலையோரம் குவித்து வைக்கப் பட்டிருப்பதாக திருமயம் தாசில்தார் பிரவீனா மேரிக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அரிமளம் போலீசார் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற தாசில்தார் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வீடு கட்டுவதற்காக மணல் வைத்திருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.