திருவள்ளூர்: நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருமழிசை பேரூராட்சியில் மதசார்பு முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தி.வே.முனுசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் உ.வடிவேலு, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பாதுகாப்பு முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு சீரிய திட்டங்களை தீட்டி மக்கள் நலனுக்காக இரவு பகல் பாராமல் நிறைவேற்றி வருகிறது. கடந்த முறை கொரானா பேரிடர் காலத்தில் தமிழக அரசு நிவாரண தொகையாக குடும்பத்திற்கு ரூ. 4 ஆயிரம் வழங்கியது. பொங்கல் பரிசு தொகுப்பாக மக்களுக்கு 21 பொருட்களை வழங்கியது.