திருத்தங்கல்லில் அண்ணா நினைவு தினம்

சிவகாசி, பிப். 5: சிவகாசி, திருத்தங்கல்லில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருத்தங்கல்லில் அண்ணா சிலைக்கு நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் மாணிக்கம், கருணாநிதிப்பாண்டியன், குருசாமி, சரவணக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேஸ், ராஜதுரை, திருப்பதி, முருகேசன், கருப்பையா, துரைபாண்டியன், செல்வராணி, இளைஞரணி கார்த்திக், செந்தில், மாரீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: