மதுரை மருத்துவக்கல்லூரியில் வடமாநில தொழிலாளி மர்மச்சாவு

மதுரை, பிப். 5: மதுரை  அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல்  கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம்  கான்ட்ராக்ட் எடுத்து செய்து வரும் இப்பணிகளில், வட மாநிலத்தை சேர்ந்த  தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கி  வேலைபார்ப்பதற்காக தனி இடம் ஒதுக்கி ஷெட் போடப்பட்டுள்ளது. மேலும்  இவர்களுக்கு, சமையல் செய்வதற்காக, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நாகேந்திரன்  பிஹீரா(49) உள்ளட்ட சிலர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில்,  நேற்று அதிகாலை நாகேந்திரன் பிஹீரா, தான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில்  தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். தகவல்  கிடைத்து வந்த தல்லாகுளம் போலீசார், நாகேந்திரன் பிஹீராவின் உடலை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் சென்னை அய்யனார்புரத்தை சேர்ந்த செல்வம்  அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலை  செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா விசாரித்து வருகின்றனர்.

Related Stories: