பெரம்பலூர்,பிப்.1: பெரம்பலூர் மாவட்டம், குன் னம் தாலுக்கா பெரியம்மா பாளையம் கிராமத்தை சே ர்ந்தவர் அழகேஸ்வரி(45). ஒதியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்து ணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று(31ம்தேதி) காலை தனது வயதான பெற்றோருடன் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்குவந்து, கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். இதுகுறித்து அவர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நான் முதலில் வேப்பூரிலும், பிறகு 3வருடம் கள்ளம் புதூரிலும் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்தேன். அப்போதுஎனக்கு இடதுகை முறிவு ஏற்பட்டதால் பின்னர் ஒதியத்திற்குப் பணி மாற்றம் வழங்கினர்.அங்கு எனக்கு மேலே பணிபுரிந்து வருபவரும், எனக்குக் கீழே பணிபுரிந்து வருபவரும் பிரச்னை.