திருச்செங்கோடு: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிப்பாளையம் ஒன்றியம், 85.கவுண்டம்பாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, எலச்சிப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு சரிபார்த்தார். பின்னர், 85.கவுண்டம்பாளையம் ஊராட்சி பள்ளிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் கரை மேம்பாடு செய்யும் பணி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாளர்களால் மேற்கொள்ளப்படுவதையும், ஓம் சக்தி நகர் அருந்ததியர் காலனியில், 14வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ₹5.87 லட்சம் மதிப்பில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளதை கலெக்டர் ஆய்வு செய்தார்.