செய்யாறு, ஜன.31: செய்யாறில் நடந்த சோதனையில் ஆடு வியாபாரி ஆவணமின்றி எடுத்துச்சென்ற ₹59 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று செய்யாறு வட்ட துணை தாசில்தார் தேவி தலைமையில் எஸ்ஐ தியாகச்செம்மல், போலீஸ்காரர் மாலதி ஆகியோர் கொண்ட பறக்கும்படை குழுவினர், காஞ்சிபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலை 8.30 மணியளவில் அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர் ₹59,300 வைத்திருந்தது தெரியவந்தது.