2 மூதாட்டிகளை வெட்டியவர் கைது

கமுதி, ஜன.21: கமுதியில், முன் விரோதம் காரணமாக இரண்டு மூதாட்டிகள் அரிவாளால் வெட்டப்பட்டனர். கமுதி வெள்ளையாபுரம் பகுதியை சேர்ந்த ஞானவரம் மனைவி சோலையம்மாள்(65). இவருக்கும் அதே பகுதியைசேர்ந்த பாலமுருகன்(30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று சோலையம்மாள் வீட்டின் வெளியே நின்றபோது, அப்பகுதியாக வந்த பாலமுருகன் சோலையம்மாளின் முதுகில் அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது குமரையா மனைவி குப்பம்மாள்(80) சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களே அழைக்க முயன்றபோது, குப்பம்மாளின் தலையில் பாலமுருகன் அரிவாளால் வெட்டியுள்ளார்.இரண்டு மூதாட்டிகளும் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கமுதி போலீசார்வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தனர்.

Related Stories: