சீதபற்பநல்லூர், மாறாந்தை மானூரில் இன்று மின்தடை

நெல்லை, ஜன. 11: சீதபற்பநல்லூர், மானூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (11ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சீதபற்பநல்லூர், புதூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து மற்றும் மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இத்தகவலை நெல்லை கிராமப்புற மின்வாரிய செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்தார்.

Related Stories: