நெல்லை மாவட்டத்தில் மதுக்கடைகள் 3 நாள் அடைப்பு

நெல்லை, ஜன. 11: திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினம், குடியரசு தினம் ஆகிய 3 நாட்களில் நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுக்கடைகள், மதுபான கூடங்கள் முழுவதும் அடைக்கப்படும் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் ஆகியவை வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 18ம் தேதி வள்ளலார் ராமலிங்க அடிகளார் நினைவு நாள் மற்றும் 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய நாட்களன்று மூடப்படும். மேலும் மதுபான கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: