செம்பனார்கோயில் அருகே சாராயம் விற்றவர் கைது

செம்பனார்கோயில், ஜன.11: செம்பனார்கோயில் அருகே மடப்புரம் சிதம்பரம்கோயில்பத்து பகுதியை சேர்ந்தவர் தூண்டி என்கிற பாலகிருஷ்ணன் (52). இவர் தனது வீட்டிலேயே சாராயம் பதுக்கி வைத்து விற்பதாக செம்பனார்கோயில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் போலீசார், அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பாலகிருஷ்ணன், வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Related Stories: