நாகை, ஜன.9: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாகை மாவட்டத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (10ம் தேதி) முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அரசின் மறு உத்தரவு வரும் வரை நாளை (10ம் தேதி) முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி குறைதீர் கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் முதலில் தங்களது செல்போனில் ‘Bharat vc’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.