சிங்கம்புணரி அருகே கொள்ளையன் கைது

சிங்கம்புணரி,: சிங்கம்புணரி அருகே வாகனச்சோதனையில் வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அவ்வழியாக டூவீலரில் வந்த குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் பாரதிராஜா(20) மீது சந்தேகமடைந்து அவரை போலீசதர் விசாரணை செய்தனர்.

அப்போது அவர்,  மல்லாகோட்டை பகுதியில் செயின் பறிப்பு மற்றும் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாரதிராஜாவை எஸ்ஐ அந்தோணி கைது செய்தார். இதையடுத்து பாரதிராஜாவை சிங்கம்புணரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  திருப்புத்தூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: