சிங்கம்புணரி,: சிங்கம்புணரி அருகே வாகனச்சோதனையில் வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக டூவீலரில் வந்த குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் பாரதிராஜா(20) மீது சந்தேகமடைந்து அவரை போலீசதர் விசாரணை செய்தனர்.