கம்பம்:தேனி மாவட்ட போலீசார், வீதிதோறும் சென்று ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை தொற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஒமிக்ரான் என்ற பெயரில் பரவி வருகிறது. நோய் பரவலை தடுக்க தமிழக அரசு தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடனும் முகக் கவசங்கள் அணிந்தும் செல்ல அரசு வலியுறுத்தி வருகிறது. தேனி அல்லி நகரத்தில் எஸ்என்ஆர் ஜங்சன் பகுதியில் நேற்று எஸ் முகமது யாகியா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.