குடியாத்தம் அருகே 2 மகள்களின் தாய் 19 வயது வாலிபருடன் ஓட்டம்

குடியாத்தம், ஜன.5: குடியாத்தம் அருகே 19 வயது வாலிபருடன் ஓட்டம் பிடித்த 2 மகள்களின் தாயை, புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கணவன் மற்றும் 9, 8 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றி வந்தார். கடந்த 2ம் தேதி வழக்கம்போல், வேலைக்கு சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் குடியாத்தம் டவுன் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இளம்பெண் பணிபுரியும் தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்து வந்த 19 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணையும், 19 வயது வாலிபரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: