சிவகாசி: சிவகாசியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பஸ்நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட அரசு நகர பஸ்கள், 30க்கும் மேற்பட்ட அரசு புறநகர் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றன. பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூர் செல்லும் பஸ்களுக்கு தனியாக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஸ்நிலையத்தில் உள்ள காலியிடங்களில் பழக்கடை, பெட்டிக்கடை அமைத்துள்ளனர். இவர்கள் பஸ்கள் நிற்கும் இடங்களில் ஸ்டால்கள் அமைத்துள்ளனர். மேலும், பஸ் நின்று செல்லும் இடங்களில் டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர்.