ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டார தோட்டக்கலை இயக்குனர் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்த பொதுமக்களுக்கு தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் மாடிதோட்ட தளைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு தளையில் செடி வளர்க்க உதவும் 6 பாலித்தீன் பைகள், 2 கிலோ எடையுள்ள 6 தென்னை நார்க்கழிவு கட்டிகள், காய்கறி விதை பாக்கெட்டுகள் இருந்தன. இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக இறுதியாண்டு இளங்கலை தோட்டக்கலை மாணவிகள் கலந்து கொண்டனர்.