திருச்செந்தூர் அருகே வீட்டை சேதப்படுத்தியவர் கைது

திருச்செந்தூர், ஜன.1: திருச்செந்தூர் அருகே அக்கா வீட்டை சேதப்படுத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி. இவரது மனைவி சேர்மக்கனி(56). அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் கணேசன் என்ற ஆபிரகாம்(52). விவசாய கூலித்தொழிலாளி. சேர்மக்கனியும், கணேசனும் அக்கா, தம்பி ஆவர். இந்நிலையில் சேர்மக்கனிக்கு சொந்தமாக வீட்டில் தனக்கு பங்கு கேட்டு கணேசன் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

கடந்த 30ம்தேதி சேர்மக்கனி வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த கணேசன், அவரது வீட்டு கேட் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனை அறிந்த சேர்மக்கனி தட்டிக்கேட்கவே அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது

குறித்து அவர், திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ ஸ்டீபன் விசாரணை நடத்தி கணேசனை கைது செய்தார்.

Related Stories: