திருச்செந்தூர், ஜன.1: திருச்செந்தூர் அருகே அக்கா வீட்டை சேதப்படுத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி. இவரது மனைவி சேர்மக்கனி(56). அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் கணேசன் என்ற ஆபிரகாம்(52). விவசாய கூலித்தொழிலாளி. சேர்மக்கனியும், கணேசனும் அக்கா, தம்பி ஆவர். இந்நிலையில் சேர்மக்கனிக்கு சொந்தமாக வீட்டில் தனக்கு பங்கு கேட்டு கணேசன் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.