சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

சேலம்: சேலம் செரிரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, டவுனில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25ம் தேதி, அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை. பெற்றோர் விசாரித்ததில், பக்கத்து கடையில் வேலை பார்த்து வந்த அம்மாபேட்டை தேசிங்குதெருவை சேர்ந்த ரத்தினம் (25) என்ற வாலிபர் சிறுமியை கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார், சிறுமியை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடினர். அதில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ரத்தினத்தை போலீசார் பிடித்தனர். சிறுமியையும் மீட்டனர். சிக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவரை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதற்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது. மேலும், சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதும் தெரிந்தது. இதையடுத்து, போக்சோ வழக்காக மாற்றம் செய்து ரத்தினத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: