திருவெறும்பூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

திருச்சி, டிச.30: திருச்சி கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் நடராஜபுரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் ஆகிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 639 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், 50 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறையினர், விவசாயிகள் கலந்துகொண்டனர். திருச்சி உதவி இயக்குநர் மருதைராஜூ, கால்நடை உதவி மருத்துவர் ஜெயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரிக்கன்று தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது.

Related Stories: