ஆண்டிமடம், டிச.30: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் புதிய கால்நடை மருந்தகக் கட்டிடங்களை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, கால்நடை மருந்தகங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நபார்டு வங்கியின் நிதி உதவி மூலம் ஆண்டிமடம், ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆண்டிமடம் கால்நடை மருந்தகம் பழமையான கட்டிடம் என்பதால் 40 ரூ.34.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் இடைக்கட்டு கிராமங்களில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்து வைத்தார். விழாவின்போது சிறப்பாக கறவை பசுக்களை பராமரித்தவர்களுக்கு பால் கலன்களை வழங்கினார்.