தாந்தோணிமலை ராயனூர் நான்கு ரோடு சாலையில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்

கரூர், டிச. 30: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனூர் நான்கு ரோடு சாலையில் கூடுதல் தெரு விளக்கு வசதி அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து தாந்தோணிமலை, மில்கேட், வெங்கடேஷ்வரா நகர், குறிஞ்சி நகர், கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனூர் நான்கு ரோடு தாந்தோணிமலை சாலையில் சென்று வருகின்றன.இந்நிலையில், இந்த சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை போதுமான அளவு தெரு விளக்கு வசதி குறைவு காரணமாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் பல்வேறு தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே இந்த சாலையில் அனைவரின் நலன் கருதி கூடுதல் தெரு விளக்கு அமைத்து தர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: