வளாக நேர்முகத் தேர்வு 55 பேருக்கு பணி ஆணை

காரைக்குடி, டிச.28: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வளாக நேர்முகத் தேர்வில் 55 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை, எலெக்ட்ரிக்கல் துறை 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வீல்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் வளாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார்.

கல்விகுழும செயலாளர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார். தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மனிதவள மேம்பாட்டு அலுவலர் திருமலைமதன் வளாகத் தேர்வு நடத்தினார். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட 55 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மெக்கானிக்கல் துறை தலைவர் சேகர் நன்றி கூறினார்.

Related Stories: