திருப்பூர், டிச. 28: திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டெய்லருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூரில் கடந்த 2020 ம் ஆண்டு குமரானந்தபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் திருப்பூர் குமாரனந்தபுரம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன டெய்லர் செல்வம் (50) என்பவரை வடக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.